iyarkai kavithai in tamil
ஹைக்கூ கவிதைகள்
வான்மழை
அனைவரும் அழைக்கிறார்கள் ஆர்ப்பரித்து அளிக்கிறேன்
அவர்களை வேண்டி விரட்டுகிறார்கள் விடைபெற
வான்மழை
காற்றில் கீற்றுகள்
உறக்கம் கலைத்து நூறு விரல்களால்
இசையை மீட்டி இன்ப நடனம் ஆடுகிறது
காற்றில் கீற்றுகள்
உயிர் காற்றே
பிரிந்து போய் விடாதே
இறந்து போய் விடுவேன்
உணரும் உன்னை உயிராக கொண்டேன்
உயிர் காற்றே
பாயும் நதிகள்
வானை திறந்து மலையில் விழுவாய்
மலையை தழுவி புவியில் படர்வாய்
புவியை குளிர்த்து கடலிலகரைவாய்
பாயும் நதிகள்
ஈசல் கூட்டங்களே
எங்கே போகிறீர்கள் கனவுகள் கலைக்கப்படும்
சிறகுகள் உடைக்கப்படும் உயிர்கள் பிரிக்கப்படும்
எங்கே போகிறீர்கள்
ஈசல் கூட்டங்களே