மூன்றாவது உண்மை
நீ
அழகு
என்பது
ஒர் உண்மை.
மற்றொன்று,
உண்மை
என்பது
ஓர் அழகு.
இரண்டு
உண்மைகளையும்
சொல்லி விட்டேன்,
மூன்றாவது உண்மையை
கடைசி பாராவில்
சொல்கிறேன்.
ஆனால்
உன் காதல்
என்பது
இதையெல்லாம் விட
அழகு.
அழகான கவிதைகள்
அழிவதில்லை
எப்போதும்.
ஆம்,
நீ
கவிதைதான்.
மூன்றாவது
உண்மையை
கடைசி பாராவில்
சொல்வேன்,
என்றேனே!
மூன்றாவது பாரா தான்
அந்த
மூன்றாவது உண்மை..!