ஒரு வரி காதல் தோழன் கவிதைகள் – 2
காதலனே

கவிதைமொழியில் கதைத்து காதலோடு கரம்ப்பற்றும் காதலனே.
அன்பானவனே

அன்பென்னும் அகராதியால் அரவணைத்து அடிமைப்படுத்தும் அன்பானவனே.
காதல்கொள்வேன்

காலங்கள் கடந்தாலும் காத்திருப்பிலே காதல்கொள்வேன் காதலனே.
கரியசிகை

கர்வம்கொண்டு கதைக்கிறது காரிகன் கரம்கோதும் கரியசிகை.
இதயமானவன்

இதயத்தை இருப்பிடமாக்கி இதமாய் இனிக்கிறான் இதயமானவன்.